இலங்கைசெய்திகள்

குடும்பஸ்தரை மோதித்தள்ளிய கொழும்பு பஸ்!!

 இன்றைய தினம் (26-02-2023) வவுனியா, ஏ 9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  

துவிச்சக்கரவண்டியில் பயணித்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை  வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button