இலங்கைசெய்திகள்

இன்று முதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை!!

Compensation

இன்று முதல் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை விவசாயத்துறை அமைச்சர் சானக்க வக்கும்பர உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது வரையில் 3 மாவட்டங்களில் பயிர்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கைகள் அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஏனைய மாவட்டங்களினதும் தரவுகளை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிர்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு 2500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button