இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நாட்டில் காலாவதியான 60 சட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

காலாவதியான 60 சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabri) தெரிவித்துள்ளார்.

அதன்படி, நீதித்துறையில் தற்போதுள்ள குற்றவியல், வணிக மற்றும் சிவில் சட்டங்களை மாற்றியமைக்க மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் அரச சிறை சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகள் மறுவாழ்வு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடனான இன்று  இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் சுமார் 20 ஆண்டுகளில் திருத்தப்பட்டுள்ளதாகவும், நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து தேவையான தீர்வுகளை வழங்குவதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button