![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/03/24-6603e2717dc55.webp?resize=600%2C400&ssl=1)
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இலங்கையில் யாசகம் பெறுவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை நாட்டிற்கு மிகவும் ஆபத்தான நிலைமை என்றும், இதன் மூலம் குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.