கதைசெய்திகள்முத்தமிழ் அரங்கம்.

யார் பணக்காரன்?யார் ஏழை?

Story

 இந்தக் கேள்விக்கு விடை  தெரியுமா??

பணம் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் . 

கஷ்டப்படுபவன் ஏழை . 

அது தானே உங்கள் பதில்❓

இந்த பதில் சரியா❓

சம்பவம் 1 

“””””””””””””””””””

ஒரு பெரிய சீமாட்டி ஒரு புடவைக் கடைக்கு செல்கிறாள் புடவை எடுக்க .

 ” எனக்கு கொஞ்சம் பட்டுச்சேலைகள் காட்டுங்கள் . 

விலை மலிவாக இருக்கட்டும் . 

என் மகனுக்கு திருமணம் . 

என் வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்கவேண்டும் … ” என்கிறாள் . 

சேல்ஸ்கேர்ள் எடுத்து போட்ட புடவைகளில் மலிவானதாக ஒன்றை செலக்ட் செய்து பணத்தை கட்டிவிட்டு எடுத்துச் சென்றாள் . 

சற்று நேரம் கழித்து அந்த வேலைக்காரி வருகிறாள் . 

” என் முதலாளியம்மா பையனுக்கு கல்யாணம் . 

நல்ல சேலையா ஒன்னு அவங்களுக்கு எடுத்து கொடுக்கணும் . 

விலை கொஞ்சம் கூட இருந்தாலும் பரவாயில்லை . 

நல்ல டிசைன்ஸ் எடுத்துப் போடுங்க என்றாள்..

சம்பவம் 2 

“””””””””””””””””””

ஒரு பெரிய இடத்துப் பெண் , 

ஒருமுறை பிக்னிக்கிற்கு சென்ற இடத்தில ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தாள் . 

அவளது கைக்குழந்தை திடீரென பாலுக்காக அழ , 

ஹோட்டல் நிர்வாகத்திடம் 

” குழந்தைக்கு பால் கிடைக்குமா❓ ” என்றாள் . 

” எஸ் மேடம் … கிடைக்கும் . 

ஒரு கப் நூறு ரூபாய் ஆகும் ” என்று பதில் வந்தது . 

” பரவாயில்லை … 

உடனே ஒரு கப் வேண்டும் ” என்று கூறி ஆர்டர் செய்து பாலை வரழைத்தாள் . 

அவள் ஊருக்கு திரும்பிப் போகும்போது வழியில் மறுபடியும் குழந்தை பாலுக்காக அழ , 

சாலையோரம் இருந்த ஒரு டீக்கடையில் காரை நிறுத்தி , 

பால் கிடைக்குமா என்று விசாரித்தாள் . 

” பசும்பாலே இருக்கும்மா ” என்று கூறி அக்கடைக்கார் , 

பசும்பால் கொடுத்தார் . 

” ரொம்ப தேங்க்ஸ்பா … 

எவ்ளோ ஆச்சு❓ ” 

” பணம் வேண்டாம்மா … 

குழந்தைங்க குடிக்கிற பாலுக்கு நான் காசு வாங்குறதில்லை ” என்று பதில் சொன்னவர் , 

” இன்னும் வேணும்னாலும் வாங்கிக்கோங்க . 

போற வழியில குழந்தை அழுதா என்ன பண்ணுவீங்க ❓ ” என்றார் பரிவுடன் . 

சம்பவம் 3 

“””””””””””””””””””

அலுவலகத்துக்கு புறப்படும்போது தான் அந்த இளைஞன் கவனித்தான் . 

செருப்பு பிய்ந்துபோயிருந்தது . 

பிரதான சாலை வந்ததும் அந்த செருப்பை தைக்க செருப்பு தைப்பவரை தேடிச் சென்றான் . 

ஒரு நபர் சாலையோரம் ஒரு குடைக்கு கீழே செருப்புக்களை தைத்தபடி அமர்ந்திருந்தார் . 

வண்டியை அவர் முன் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி , செருப்பை அவர் முன் போட்டவன் , 

” இதை கொஞ்சம் தைச்சு கொடுங்க . 

புது செருப்பு . 

எப்படி பிஞ்சதுன்னு தெரியலே … ” ‘ 

எவ்ளோப்பா ஆகும்❓

” செருப்பை வாங்கி ஆராய்ந்த அந்த தொழிலாளி , 

‘ இருபது ரூபா ஆகும் சார் … ” 

” இருபது ரூபாயா❓

பத்து ரூபாய் வாங்கிக்கோங்க …. 

* அந்த இளைஞரை சற்று தலையை  நிமிர்த்தி பார்த்தார் . 

கதிரவனின் கதிர்கள் சுட்டெரித்தது . 

சரியாக பார்க்க முடியவில்லை . ” 

இருபதுக்கு கம்மி தைக்க முடியாது சார் ’ ” 

என்ன இதுக்கு போய் இருபது ரூபாயா❓

பதினைஞ்சு வாங்கிக்கோங்க ‘ 

” நான் கம்மியாத் தான் சொல்லியிருக்கேன் . 

சொல்யூஷன் போட்டு ஒட்டி தைக்கணும் . 

அப்போ தான் தையல் நிக்கும் ” 

இளைஞனின் பேரம் தொடர்ந்துகொண்டிருந்தது . 

இதனிடையே … 

டீ ஆர்டர் எடுக்க பக்கத்து டீக்கடை சிறுவன் வந்தான் . 

” ஒரு டீ கொண்டு வாப்பா ….. 

சார் டீ சாப்பிடுறீங்களா❓❓

அந்த இளைஞனின் பதிலுக்கு காத்திராமல் , 

” சாருக்கும் ஒரு டீ சேர்த்து ரெண்டு டீ கொண்டுவாப்பா … ” என்றார் . 

” இல்லே ஐயா வேண்டாம் … ! ” 

பரவாயில்லை சார் … 

சாப்பிடுங்க … 

நல்லா இருக்கும் . 

இந்த ஏரியாவுல முப்பது வருஷமா இருக்குற கடை அது … 

” சற்று நேரத்தில் சூடான டீ வந்தது . 

அந்தப் பெரியவரிடம் பத்து ரூபாய்க்கு பேரம் பேசிய அந்த இளைஞன் நெளிந்தபடி அந்த டீயை அருந்தினான் . 

செருப்பு தைத்து முடித்த பிறகு . 

பைசா கொடுக்கும்போது சாப்பிட்ட டீக்கும் சேர்த்து தர , 

அந்த பெரியவர் சொன்னார் …

 ” செருப்பு தைச்சதுக்கு மட்டும் காசு கொடுங்க … 

டீக்கு வேண்டாம் …

 என்னோட கஸ்டமர் நீங்க … 

உங்களை உபசரிக்கிறது என்னோட கடமை .. ” என்றார் . 

தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தம் அருகே உண்மையில் நடந்த சம்பவம் இது. 

நம் வாசகர் ஒருவர் கவனித்த சம்பவம். 

இங்கு யார் பணக்காரர்❓❓

காரில் வத்து விலை குறைந்த புடயை வாங்கிச் சென்ற அந்த சீமாட்டியா❓

அல்லது 

நடந்து வந்து விலையுயர்ந்த புடவையை தனது எஜமானிக்கு வாங்கிச் அவள் வீட்டு வேலைக்காரியா❓

குழந்தையின் பாலுக்கு கூட அறியாய விலை வைத்த அந்த ஸ்டார் ஓட்டல் மேனஜரா❓

அல்லது 

குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு பணம் வேண்டாம் . என்று சொன்ன இந்த சாலையோர டீக்கடைக்காரரா❓

செருப்பு தைப்பவரிடம் பத்து ரூபாய்க்கு பேரம் பேசிய பைக்கில் வந்த இளைஞரா❓

அல்லது 

டீயை அவருக்கு கொடுத்து உபசரித்த செருப்பு தைப்பவாரா❓

பணக்காரன் , 

ஏழை குறித்த தவறான மதிப்பீடுகள் ( WRONG DEFINITION ) ஆண்டாண்டு காலமாக நமது சிந்தனையில் ஊறிப்போயிருக்கிறது . 

நம்மால் இந்த உலகை மாற்றமுடியுமா என்று தெரியாது . 

குறைந்த பட்சம் இதை  படிப்பவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தலாம் . 

அவர்கள் உலகை மாற்றுவார்கள் . 

பணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் பணக்காராகிவிடமுடியாது . 

அதே நேரம் , 

பணம் இல்லாததால் ஒருவர் ஏழையும் கிடையாது . 

பணத்திற்கான ஓட்டத்தில் நாம் மனிதர்களை பொருட்படுத்துவதில்லை . பணத்தை பெரிதாக கருதாத 

இதயங்களை கவனிக்க மறந்துவிடுகிறோம் . 

தேவையுள்ளவர்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவுவோம் . 

அது தரும் மனநிறைவை பணம் நிச்சயம் தரமுடியாது ! 

தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே.

 அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே 

பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை 

இதைப் புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை.

Related Articles

Leave a Reply

Back to top button