இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை அதிகரித்துள்ளது

எரிபொருள் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபணம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிய விலை விபரம் வருமாறு,

92 ஒக்டேன் பெற்றோல் 50 ரூபாவால் அதிகரித்து 470/- ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் 100 ரூபாவால் அதிகரித்து 550 ரூபாவாகவும், வௌ்ளை டீசல் 60 ரூபாவால் அதிகரித்து 460 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 75 ரூபாவால் அதிகரித்து 520 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படாது போனாலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்தியை இரண்டு நாட்களுக்கு முன்னரே ஐவின்ஸ் இணையத்தளம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button