செய்திகள்மண்வாசனைமுக்கிய செய்திகள்

ஏர்நிலம் அமைப்பினரின் தைப்பூச நிகழ்வும் ஓய்வடையாத முயற்சியாளர் கௌரவிப்பும்!!

Mullaiteevu

 “சுழலும் பூமிபந்தில் மாறாத வறுமை அகற்றிட விளையும் எம் ஏர்நிலமே வலிமையான மனிதர்களில் எளிமையான புரட்சியாளர் இவர்கள்” என்னும் தொனிப்பொருளில்,

ஏர்நிலம் அமைப்பினால் தைபூச நன்நாளை முன்னிட்டு  விவசாயிகள் , கைம்பணி செய்பவர்களின்  கௌரவிப்புடனான பொங்கல் விழா –  2023 நிகழ்வானது 11.02.2023 அன்று மாவடி சித்தி விநாயகர் ஆலயம் மாங்குளத்தில் சிறப்புற இடம்பெற்றது

தள்ளாடும் வயதிலும் தளராத நம்பிக்கையுடன் தொழில் செய்யும் 10 விவசாயிகள் கைம்பணி உற்பத்தியாளர்களை இனம்கண்டு அவர்களை வாழும் வயதினிலே வாழ்த்தி மகிழும் விழாவானது,  மங்கள வாத்திய வரவேற்புடன் தொடங்கி, கலைநிகழ்வுகள், உரைகள், பரிசில்கள்  பொங்கல், உணவு என நிகழ்வு இனிதை நிறைவானது.

நிகழ்வை ஏற்பாடு செய்த ஏர்நிலத்திற்கும், தாங்கிக்கொண்ட கொடை நல்குனர்களுக்கும், ஒழுங்கமைத்த மாங்குளம் உறவுகளுக்கும், பணி நிறைவாக்க உழைத்த ஏர்நிலம் செயலாற்றுனர்கள், விவசாயிகள் கைம்பணி உற்பத்தியாளர்கள் முன்பள்ளிகள், பொது அமைப்புகள், கல்வி நிலையங்கள்,கிராம மட்ட அமைப்பினர், கிராம மக்கள் யாவருக்கும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

தகவல் – முறுகண்டி லக்ஷிதரன்

Related Articles

Leave a Reply

Back to top button