Breaking Newsஇலங்கைசெய்திகள்

சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பலி!!

Accident

 தென்மராட்சி  சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் அருகில்  இடம் பெற்ற விபத்தில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார்.

 இன்று (13)  முற்பகல் 11 மணியளவில்  மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக லொறியுடன்  மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்தில் யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும்  கண்டுவில் வீதி சாவகச்சேரியை சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற மாணவனே   உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button