Breaking Newsஇலங்கைசெய்திகள்

யாழில் பதற்றம் – பலர் கைது!!

Arrested

 யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட 7பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button