இலங்கைசெய்திகள்

புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை ஆரம்பம்

வேலணை – புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதிய பேருந்து சேவை ஒன்று இன்று (21) இலங்கை போக்குவரத்து சபையால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வேலணை – புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்றையதினம் புதிய பேருந்து சேவை இறுப்பிட்டி அரியனார் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

இன்றையதினம் குறித்த பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் மற்றும் வடபிராந்திய போக்குவரத்து சபையின் அதிகாரிகளின் பங்கு பற்றலுடன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றையதினம் ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த சேவையானது புங்குடுதீவு பெருங்காட்டு சந்தியூடாக இறுப்பிட்டி கேரதீவு மடத்துவெளியை சென்றடைந்து யாழ்ப்பாணத்துக்கான சேவையை முன்னெடுக்கவுள்ளது.

இதேவேளை கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் குறித்த மார்க்கமூடாக சேவை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாராண சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button