இலங்கைசெய்திகள்

ஒரே மாதத்தில் இரண்டாவது மரணம்- யாழில் நடப்பது என்ன!!

Death

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அதிக போதைப்பாவனையால் உயிரிழந்த சம்பவம் யாழ் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். திருநெல்வேலி – பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு அதிக போதைப் பொருள் பாவனையால் உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே இருதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு வைத்தியர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டும் அதனை மீறி போதைவஸ்து உள்ளெடுத்தமையால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே மாதத்தில் யாழில் இது இரண்டாவது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலை நீடித்தால் யாழ்ப்பாணம் பாரிய அழிவை எதிர்நோக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button