செய்திகள்புலச்செய்திகள்

அன்னம் வழங்கி அறம் செய்த நாவலர் பாடசாலை ஆசிரியர்கள்!!

Lunch

 புலம்பெயர்ந்து கனடா ரொறன்ரோவில் வசித்துவந்த ஆனந் ரகுபதி அவர்கள் அகாலமரணம் அடைந்திருந்த நிலையில் அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு  அமெரிக்கா – நியூயோர்க் நாவலர் தமிழ்பாடசாலை ஆசிரியர்கள் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள மாணவர்களைத் தெரிவுசெய்து  மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள். 

தமது பாடசாலையில் கற்பிக்கும் சக ஆசிரியரான வாசுகி ஜெயபதி அவர்களின் பெறாமகனின் நினைவாக  உணவினை வழங்கி வைத்து நினைவுகூரும் நாவலர் தமிழ் பாடசாலை ஆசிரியர்களுக்கு  அப்பகுதி மக்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button