இந்தியாசெய்திகள்

இலங்கை இளைஞர்கள் மூவர் தமிழகத்தில் உயிரிழப்பு!!

Accident

 இலங்கைதமிழ் இளைஞர்கள்  மூவர் வீதியில் வீடியோ எடுத்துகொண்டே சென்று விபத்தில் சிக்கிப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த இளைஞர்கள், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்துள்ளனர்.

தாங்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்தபடி சென்றபோது அவர்களுக்கு முன்னே சென்ற லொறியை முந்திச் செல்ல முயன்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணையின் போதே, உயிரிழந்த மூவரும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.. இவர்களின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button