Breaking Newsஇலங்கைசெய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

Weather

வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு 2023 ஏப்ரல் 28ஆம் திகதி அதிகாலை 05.30க்கு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல்,  சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் தென் மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button