செய்திகள்தொழில்நுட்பம்

ஏ. டி . எம்.களைப் பயன்படுதும் மக்களுக்கு எச்சரிக்கை!!

Warning

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக பலர் வேலை வாய்ப்பினை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் மோசடி நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.


அந்த வகையில், இலங்கையில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணப்பரிமாற்ற சேவைகளில் ஈடுபடும் மக்கள் மிகுந்த அவதானத்துடன்,செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரிசைகளில் காத்திருப்பது போன்று சில மோசடிக் கும்பல்கள் பின்தொடர்ந்து அச்சுறுத்தி பணத்தினைக் களவாடிச் செல்லும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும், இது தொடர்பில் அவதானத்துடன், செயற்படுமாறும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தினைப் பெற்ற ஒருவர் அச்சுறுத்தப்பட்டு பணத்தை தர மறுத்த நிலையில், சரமாரியான கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button