இலங்கைசெய்திகள்

பெண்களை அச்சுறுத்தி துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை!!

Robbery

களுத்துறை வடக்கு,  காலி வீதியில் உள்ள புத்தர் சிலை மற்றும் பூஜைப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவமொன்று சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

வர்த்தக நிலையத்துக்கு சென்ற இரு சந்தேகநபர்கள் அங்கிருந்த ஊழியர்களான பெண்கள் மூவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அத்துடன், பணிப்பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி ஒன்றையும் சந்தேகநபர்கள் பறித்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராவில் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button