கவிதைமுத்தமிழ் அரங்கம்.

எழுதுகோல் – கவிதை!!

Poetry

 தொடுகின்ற போதெல்லாம்

தொட் டணைக்கும் எழுதுகோல்.. தாளில்

இடுகின்ற போதெல்லாம்

தடவிக் கொடுக்கும் அறிவுக் கோல்!

ஆடுகின்ற மயில் போல்

அழகு விரித்து தரும் வரிகள்.. தானே 

தட்டி கொடுத்து விட..நெருப்பாக 

மூட்டி விடும் தீ வரிகள்!

விட்டு கொடுக்கும் உணர்வோடு

வேதம் ஓதும் புனித நூல்.

காதலால்

தொட்டு பேசி விட

தானாக மாறும் வசீகர கோல்!!

புங்கை ரூபன்

24-03-2023

Related Articles

Leave a Reply

Back to top button