கவிதைமுத்தமிழ் அரங்கம்.

உழைப்பின் மகிமை – கோவிந்தன்,ஈரோடு!!

poem

உழைத்து உண்ண வேண்டும் என்று
முடிவு செய்து விட்டால்
உடலின் ஊனம் ஒரு பொருட்டே இல்லை.
உயர்ந்து காட்ட வேண்டும் என்ற
உறுதி மனதில் இருந்தால்
பாரம் கூட கனப்பதில்லை.
சோதனைகளும் சூழ்நிலைகளும்
சாதகமாக அமைவதில்லை.
அவற்றை வெற்றி கொள்
முன்னேறி விடலாம்.
பாதிப்பை எண்ணி புலம்பிக் கொண்டிருந்தால்
பாதி பை கூட நிரம்பாது நண்பா.
சாதித்துக் காட்டிய கதைகளைப் படி.
அவைதான் உனக்கான ஏணிப்படி.
சாதாரண மனிதர்களே
சோர்ந்து விடும் காலத்தில்,
குறைகளை மறந்து நீ உழைப்பது சிறப்பு.
வீதிகளில் இறங்கி வீரியத்துடன் செயல்படு.
உன்னை வெற்றியின் உச்சியில் வைப்பது
விதியின் பொறுப்பு.

Related Articles

Leave a Reply

Back to top button