இலங்கைசெய்திகள்

மன்னாரில் கரடி அட்டகாசம் – அச்சத்தில் மக்கள்!!

Mannar

மன்னாரில் கரடி கடிக்கு பலர் இலக்காகி உள்ளதனால் அங்கு ஒரு வித அச்ச நிலை தோன்றியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு, நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளிலேயே கரடித் தொல்லை ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் கரடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவதாகவும், அதிகாலை நேரங்களில் மக்களைத் தாக்குவதாகவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக அதனைப் பிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரடியின் நடமாட்டம் அப்பகுதியில் உள்ள CCTV கமராவில் பதிவாகி உள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கான எரிபொருளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு கரடியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button