இலங்கைசெய்திகள்

தீக்காயங்களுடன் தாயும், மகளும் சடலங்களாக மீட்பு!!

kilinochchi

கிளிநொச்சி தர்மபுரம் – புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தாயும் மகளும் தீயில் எரியுண்டு உயிரிழந்த நிலையில் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீயில் எரியுண்டமையால் குறித்த இருவரின் சடலங்களும் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

47 வயதான தாயும் அவரது 17 வயது மகளும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவரும் அவரது மகனும் தொழில் நிமித்தம் வெளிமாவட்டத்திற்கு சென்றுள்ள நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பதைக் கண்டறிய தர்மபுரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button