இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிற்கு கடல் வழியாகச் செல்லமுயன்ற 85 பேர் கைது!!

Batticaloa

இன்று அதிகாலை, கடல் வழியாக நாட்டைவிட்டுச் செல்ல முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 85 பேரை ஏற்றிச் சென்ற உள்ளூர் மீன்பிடி இழுவைப் படகு இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

60 ஆண்களும் 18 வயதுக்கு மேற்பட்ட 14 பெண்களும் மேலும் 11 பேர் இளம் பதின்ம வயதினரும் இந்தப் படகில் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாற கைது செய்யப்பட்டவர்கள், மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

எனினும் இவர்கள் எங்கே பயணித்தனர் என்ற விடயம் தெரியவரவில்லை.

இவர்கள், திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button