செய்திகள்மண்வாசனை

கொழும்பில் இடம்பெற்ற “விழித்தெழு பெண்ணே” விருது வழங்கும் நிகழ்வு!!

Award function

 சர்வதேச ஆளுமைப்  பெண்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களிற்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்து ஊக்கப்படுத்தும் “விழித்தெழு பெண்ணே” விருது வழங்கும் விழா மிகப் பிரமாண்டமாக கொழும்பு கிங்ஸ்பெரி (Kingsbury)  மண்டபத்தில் நடைபெற்றது.

 கனடா திரு . திருமதி நரேன் சசிகலா அவர்களின் அமைப்பினூடாக இடம்பெற்ற குறித்த நிகழ்வில்  90 சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படிருந்தன.

இந்நிகழ்வில் கனடா விசேட துணைத் தூதுவர் மற்றும் இலங்கையின் அரசியல் பிரமுகர்கள் சிலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வினைத் திறம்பட நடாத்தி முடித்த, திரு நரேன் மற்றும்  துணைவியார் திருமதி சசிகலா இணையருக்கு எமது இணையதளம் சார்பில் வாழ்க்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.

 

.

நன்றி – ரூபன் சிவா

Related Articles

Leave a Reply

Back to top button