இலங்கைசெய்திகள்

பாக்குநீரிணையை நீந்திக்கடந்து மட்டு மைந்தன் மதுஷிகன் சாதனை!!

Winner

 பாக்குநீரிணையை நீந்திக் கடந்து மட்டக்களப்பு மண்ணிற்கு மட்டுமல்ல ஈழத்தமிழருக்கும் பெருமைசேர்த்தார் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரியின் பழைய மாணவரான  ரி. மதுஷிகன்.

 ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற 20 வயதுடைய மதுஷிகன் இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான 30 கிலோ மீற்றர் தூரத்தை  நேற்று அதிகாலை நீந்தத் தொடங்கி அதே தினம் பிற்பகல் 2 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார். 

இந்நீரிணை பூராவும் கடல் பாம்புகள், ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதையும் தாண்டி மட்டக்களப்பைச் சேர்ந்த இந்த மாணவன் சாதித்திருப்பது பெரிய விடயமே , காரணம் இத் தூரத்தை நீந்திக்கடக்க முயன்ற பலர் தோல்வியைத் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் சவால்களை முறியடித்து கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக நீந்தி இலக்கை அடைந்துள்ள மதுசிகனைப் பலரும் பாராட்டியுள்ளனர்.  

இவர் இச் சாதனையை புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவில் நிகழ்த்தியிருப்பது சிறப்பம்சமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button