இந்தியாசெய்திகள்

தாலியை பறித்து மணமகளுக்கு கட்ட முயன்ற வாலரால் சர்ச்சை!!

wedding

சென்னை தண்டையார்பேட்டையில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தாலி கட்டும்போது மணமகனிடம் தாலியை பறித்த வாலிபர் ஒருவர் மணமகளுக்கு தாலி கட்ட முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ரேவதி ஆகிய இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மணமகன் மற்றும் மணமகள் மேடையில் அமர்ந்த போது வேத மந்திரங்கள் முழங்க மணிகண்டனிடம் அய்யர் தாலியை எடுத்துக் கொடுத்தார்.

அப்போது மணமகன் தாலியை எடுத்து மணமகள் கழுத்தில் கட்ட முயன்றபோது திடீரென அங்கு வந்த வாலிபர் ஒருவர் மணமகனிடம் தாலியை பறித்து மணமகளுக்கு கட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

அப்போது அந்த வாலிபர் மணமகள் ரேவதியை காதலித்ததாகவும் ரேவதி கூறி தான் இங்கு வந்ததாகவும் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணமகனிடம் இருந்து தாலியை பறித்த வாலிபரின் பெயர் சதீஷ் என்றும் அவரும் ரேவதியும் ராயபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்ததாகவும் அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த திருமணம் நின்று போனதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் தாலியை மணமகள் கழுத்தில் கட்ட முயன்ற வாலிபரின் செயலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button