இலங்கைசெய்திகள்

நாளை 16 மணித்தியால நீர் வெட்டு!!

water cut

கொழும்பின் சில பகுதிகளில் நாளை முற்பகல் 8 மணிமுதல் 16 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு தெஹிவளை – கல்கிஸ்ஸ கோட்டே கடுவலை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் மஹரகம பொரலஸ்கமுவ கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதுதவிர இரத்மலானை பகுதியிலும் நாளைய தினம் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button