இலங்கைசெய்திகள்

சிங்கள மொழியில் யாழில் வழங்கப்பட்ட படிவத்தினால் இளைஞனின் மனக்குமுறல்!!

jaffna

யாழில் வசிக்கும் இளைஞன் ஒருவரின் தாய்மொழிப்பற்று அனைவரையும் வியக்கவைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவத்தில், தனது தாய்மொழி தமிழ் என இளைஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.

யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில் வாகன விபத்து காப்புறுதிக்கு படிவம் பெறச் சென்ற இளைஞருக்கு சிங்கள மொழியிலான படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் படிவத்தை நிராகரித்து, தனக்கு தமிழ் மொழியிலான படிவத்தை வழங்கும்படி கேட்டுள்ளார்.

அத்துடன், சிங்கள மொழியிலான படிவத்தின் மேல், ‘எனது தாய் மொழி தமிழ். தமிழ் படிவம் வழங்கவும் என்றும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button