இலங்கைசெய்திகள்

28 மணிநேர நீர்வெட்டு அமுல்!!

water cut

நாளை கம்பஹா மற்றும் யக்கல பகுதிகளில் 28 மணிநேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. கம்பஹா மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொழும்பு – கண்டி வீதியின் மிரிஸ்வத்த சந்தியில் இருந்து அலுத்கம – போகமுவ தேவாலயம் வீதி வரை நாளை பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் மாலை 6 மணிவரை இவ்வாறு நீர் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தற்காலிக நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button