இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மக்களுக்கு “வெப்ப சுட்டெண் ஆலோசனை”!!

Warning

 கடுமையான வெப்பம் தொடர்பில் நாட்டில்,  மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளுக்கு “வெப்ப சுட்டெண் ஆலோசனை” வழங்கப்பட்டுள்ளது. 

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்குமாறும் நீரேற்றத்துடன் இருக்குமாறும் இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும்   வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button