இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

தனித்தது தமிழரசுக் கட்சி – புதிய கூட்டணி உதயமானது!!

TNA

தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும் தனித்து போட்டியிடும்.

தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பன, சீ. வி. விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு பொதுக்கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளன.

டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அய்வரி செய்திகளிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டணியில் இணைய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றுடன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய முன்னணி ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button