இலங்கைசெய்திகள்

நாட்டிற்குப் பணி செய்யவே நாடாளுமன்றம் வந்தேன்- தம்மிக்க கருத்து!!

Thammikka perero

“நாட்டிற்குப் பணி செய்யவே நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளேன்”

இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிரச்சினை இருப்பதால்தான் நான் நாடாளுமன்றத்துக்கு வந்தேன். இப்போது என் கடமை பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான். அதை செய்து வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறேன். நல்லதொரு அமைச்சு கையளிக்கப்படும் என நினைக்கிறேன்.

எனவே எப்படியிருந்தாலும் எனது பங்களிப்பு என்னவென்றால், நான் நாட்டின் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளேன். எனவே நான் எந்த அமைச்சகத்தைப் பெற்றாலும் பங்களிக்கவும் பொறுப்பேற்கவும் இங்கு வந்தேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related Articles

Leave a Reply

Back to top button