இலங்கைசெய்திகள்

கடும் கோபத்தில் சு.க. எம்.பிக்கள்!!

Srilanka

(நமது அரசியல் செய்தியாளர்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கி அவரைக் கோட்டாபய அரசு வளைத்துப் போட்டதால் மைத்திரிபால சிறிசேன தலைமையிலானr சு.கவின் எம்.பிக்கள் குழு கடும் சீற்றமடைந்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபச்சவுக்கும் அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலைப் புறக்கணிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளது.

சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அரசு பக்கம் தாவியதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள சாந்த பண்டாரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் தயாசிறி எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.
………….

Related Articles

Leave a Reply

Back to top button