இலங்கைசெய்திகள்

சீன கப்பலின் வருகையை ஒத்திவைக்க கோரியது இலங்கை!!

Srilanka

யுவான் வாங் – 5 கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்த உளவுக் கப்பல் ஆகஸ்ட் 11 ம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து ஆகஸ்ட் 17 ம் திகதி புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் இக்கப்பலின் வருகைக்கான உண்மைக் காரணத்தை விளக்குமாறு இந்தியா கேட்டிருந்த நிலையில் இலங்கை சீனாவிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எழுத்து மூலமாக முறையான  இராஜதந்திர அணுகுமுறையுடன் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயங்களை இந்திய ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button