இலங்கைசெய்திகள்

எதிர்கட்சித் தலைவர் கலந்து கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் அடிதடி

மாத்தறை ஊருபொக்க நகரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (23) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அடிதடிச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும் பொருட்களில் விலை அதிகரிப்புக்கு எதிராக மாத்தறையில் இடம்பெற்ற போராட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்ட பேரணி ஊர்வலமாக சென்று கொண்டிருந்த வேளையில் குடிபோதையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களால் அடிதடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் பொலிஸாரினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button