இலங்கைசெய்திகள்

மீனவர்கள் மீது தாக்குதல் – யாழ்.வடமராட்சி கிழக்கில் சம்பவம்!!

attark

சிவில் உடையில் வந்த நபர்கள் யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தம்மை பாதுகாப்பு தரப்பினர் என அடையாளப்படுத்தியே மீனவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது “தாக்குதலுக்குள்ளான மீனவர் கடற்றொழிலுக்குச் சென்றவேளை கடலில் இந்திய இழுவை படகுகளால் 17 வலைகளை இழந்திருக்கின்றார்.

பிற்பகல் 2:45 மணியளவில்

கரைக்கு திரும்பியவர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு சென்ற சிலர் தங்களை இராணுவ புலானாய்வு பிரிவினர் என அடையாளப்படுத்தி விசாரணை செய்துவட்டு சென்றிருக்கின்றனர்.

மீண்டும் விசாரணைக்கு வருமாறு குறித்த மீனவர் அழைக்கப்பட்டுள்ளார். இதன்போது வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு கை கால்கள் கட்டப்பட்டு சரமாரியாக தாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்த 34 வயதுடைய ஞானப்பிரகாசம் ராஜ்குமார் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே காயமடைந்துள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான மீனவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

attark

Related Articles

Leave a Reply

Back to top button