இலங்கைசெய்திகள்

மின் துண்டிப்பு – வெளிவந்த அவசர அறிவிப்பு!!

Power cut

எதிர்வரும் நாட்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளைய தினம் ஒரு மணிநேரமும், நாளை மறுதினம் முதல் சுமார் 2 மணிநேரமும் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என அந்த சங்கங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரட்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை இவ்வாறு நீடித்து, மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறாவிட்டால் மார்ச் மாத இறுதியில் மின்சார விநியோகத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும். எனவே, மாலை 6.30 முதல் 9 மணி வரையான காலப்பகுதியிலேயே அதிகளவான நேரத்திற்கு மின் துண்டிப்பு இடம்பெறும்.

பிற்பகல் 2.30 முதல் 4 கட்டங்களாக மின் துண்டிப்பை மேற்கொள்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக நாளைய தினம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரட்ன குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button