இலங்கைசெய்திகள்

எதிர்வரும் மூன்று தினங்களுக்கு மின் துண்டிப்பு இல்லை!!

power cut

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றும்(22) நாளையும், நாளை மறுதினமும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மின்சார பிரச்சினைக்குத் தீர்வுகாண, எதிர்காலத்தில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக, இன்று(22) முற்பகல் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், வீதி விளக்குகளை ஒளிரச் செய்யும் காலத்தை மட்டுப்படுத்த அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button