இலங்கைசமீபத்திய செய்திகள்செய்திகள்பிரதான செய்திகள்முக்கிய செய்திகள்

எரிபொருள் வழங்கக் கோரி வடமராட்சி வடக்கு கிராம அலுவலர்கள் போராட்டம்

(நமது விசேட செய்தியாளர்)

யாழ்., வடமராட்சி வடக்கு – பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த கிராம அலுவலர்கள், இன்று வடமராட்சி வடக்கு – பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “கிராம அலுவலர் அத்தியாவசிய அலுவலரா? அநாவசிய அலுவலரா?”, “கொவிட் காலத்தில் அத்தியாவசிய அலுவலர்; பொருளாதார நெருக்கடி காலத்தில்…?”, “எரிபொருள் விநியோகத்தில் கிராம அலுவலர்களைப் புறக்கணிக்காதீர்கள்” – என்று எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button