கவிதைசெய்திகள்முத்தமிழ் அரங்கம்.

நினைவுகள் அழிந்து விட்டால்….!! – புங்கை ரூபன்.

Poet

கனவு காட்சி யிங்கே

நினைவு தனில் தோன்றாது.

கற்பனை யுலக மெல்லாம் 

கண் முன்னே விளங்காது!

தன் இரத்த சொந்தத்தை

நினைவு தனில் மீட்டெடுக்க முடியாது!

தன் நடை முறைதனை

நியத்திலே பக்குவமாக செய்ய இயலாது!

நினைவு நூ லறுந்து விட்டால்

நிய வாழ்க்கை வாழக் கிடைக்காது!

தனதென இருப்பாவை யாதெனும்

தற்க வைக்க தெரியாது!

எண்ணத்தில் பதிந்த எதிரியைக் கண்டால்

எதிர்த்து வீர மீசை முறுக்க முடியாது!

கன்னத்தில் கொஞ்சும் மனைவியைக் கூட

கட்டெறும்பு கடித்த உணர்வாக வலிக்காது !

நினைவு நூல் திடீரென அறுந்து விட்டால் 

நியத்திலே வயதுக்கு எல்லை கிடையாது!

வன்முறைக் காரர்கள் உணர்ந்து விட்டால் 

வையகத்தில் மகிழ்ச்சிக்கோ குறை ஏது…!!

புங்கை ரூபன்

05-03-2023

Related Articles

Leave a Reply

Back to top button