கவிதைமுத்தமிழ் அரங்கம்.

மகளதிகாரம்1 – தூரா.துளசிதாசன் !!

poem

உதிரத்தால் உருவாகி,
கருவாகி கையில் கிடைத்த
பூமியின் தேவதை இவள்..!
தாயின் மடியில் நான் ..!
காலம் மாறியது ,
இன்று என் மடியில்
தாயாய் என் தேவதை.!
கையில் ஏந்திய
மறு நொடியில் காற்றாய்
கனக்கிறது இதயம்..!
எப்படி சிறகு முளைத்தது..?
தெரியவில்லை..
வானில் பறந்தேன்
பட்டாம்பூச்சியாக..!
முகம் பார்த்தாள் …
பிஞ்சு விரலால் வருடினாள்..
என்னை ஈரமாக்கினாள்…
அந்த நொடி
ஈர நினைவுகளை சுமந்த
என் இதயம்
நதியில் நனைந்த
நிலவாய் உருமாறியது..!
( தொடரும்….)
தூரா.துளசிதாசன்
தூத்துக்குடி

Related Articles

Leave a Reply

Back to top button