இலங்கைசெய்திகள்

எரி பொருள் விநியோகத்தால் நட்டம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!!

Petroleum Corporation

பெற்றோல் மற்றும் டீசலை சந்தைக்கு விநியோகிக்கும் போது, தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, டீசல் லீட்டர் ஒன்றிற்கு 36 ரூபாவினாலும், பெற்றோல் ஒரு லீட்டருக்கு 8 ரூபாவினாலும் நட்டம் ஏற்படுவதாக  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர்  சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன்,  இந்த விடயத்தில் உடனடியாக தீர்வை வழங்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ளதாகவும்  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர்  சுமித் விஜேசிங்க  குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button