இலங்கைசெய்திகள்

தகாத உறவைத் தட்டிக்கேட்ட கணவனை படுகொலை செய்த மனைவி – நுவரெலியாவில் பயங்கரம்!!

murder

நுவரெலியா, பீட்ரு பகுதியில் மனைவியால் கணவன் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன் – மனைவி இடையே நேற்றிரவு ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதையடுத்தே இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையே (வயது – 44) இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மனைவிக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த விடயம் தெரியவர, அது தொடர்பில் மனைவியிடம் கணவர் வினவியுள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அவரைப் பொல்லால் கடுமையாகத் தாக்கி கொன்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button