கட்டுரைசெய்திகள்

முல்லைத்தீவுடன் முடிவுக்கு வருமா மாணவிகள் மீதான துஷ்பிரயோகம்!!

Mullaiiteevu

இது காவாலிகளிள் காலம்…
கவனமாக இருங்கள் உறவுகளே…

முல்லைத்தீவு மாவட்டத்தில் இம்முறை சாதாரண தரப்பரீட்சை எழுதிய பாடசாலை மாணவிகள் பலர் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை
கல்விச் சமூகத்தை அதிர்ச்சியில் உறைய. வைத்துள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி சகல ஊடகங்களுக்கும்
தீனியாக இருந்தது. அது முல்லை மண்ணுக்கும் பாடசாலைக்கும் , பெண்களின் கல்விக்கும் பெரும் சாபக்கேடாகும் என்பதை
உணர்ந்து எவரும் விழிப்புணர்வு அடைந்ததாக
தகவல்கள் இல்லை. .இவ்வாறான சம்பவங்கள் பொலிசாருக்கு
கோழிப்பிரியாணியுடன் சாப்பிட்டது போல் தான் உள்ளது .ஆனால் இவ்வாறு அழிவது
தமிழினமே என்ற எண்ணம் எம்மவர் எவருக்கும் இல்லை .

ஆசிரியர், குறிப்பிட்ட மாணவர்களைப் பயன்படுத்தி மாணவிகளைக் காதல் வலையில் வீழ்த்தி, அவர்கள் ஊடாக மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களைப்பெற்று ஆசிரியரும் அந்த மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் மேலும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் பதினேழு மற்றும் பதினெட்டு வயதை உடைய ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ள போதும் இந்தச் சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து மாணவிகள் பலரின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

இவ்வாறு ஆசிரியரும் மாணவர்கள் சிலரும் செய்த சேட்டையை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை எடுத்து பார்வையிட்டுள்ளனர்.
இது முல்லை இளைஞர்களின்
முனமாதியான செயற்பாடு ஆகும்.ஒவ்வொரு இடத்திலும் இவ்வாறான இளைஞர் அணி அவசியமாகிறது

முல்லைத்தீவு என்பது உலகத்தின் வரலாறுகளில் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாகப் பதிந்து போன பெயர். முள்ளிவாய்க்கால் நிலம் முல்லைத்தீவில் தான் உள்ளதென்பது யாவரும் அறிந்த ஒன்றே.

பாடசாலை என்பது கல்வி போதிக்கும் கோயில். அது கலவியின் களமாக கூறப்படுவது .அறியாமையின் ஆன்மாவை அறுத்துப்போடுகின்ற ஒரு விடயம்.

ஆழமாக யோசித்தால் இது திட்டமிடப்பட்ட ஒரு விடயமாகவே நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில்,

ஆசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்படுள்ளமை யோசிக்க வேண்டிய விடயமாகும்.
இவ்வாறு ஆசிரிய பணிக்கு அமரத்தியிருந்தால் அதிபர் அவ் ஆசிரியர் மீது விசேட கவனம் செலுத்த வேண்டும்.
நிலமை இவ்வளவு கேவலமடையும் வரை அதிபருக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் தெரியாமல் இருந்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.

தற்போது தமிழர் பிரதேசங்களில் இவ்வாறான திட்டமிடப்பட்ட நாசாகார வேலைகள் இடம்பெறுவது சாதாரண விடயமாகிவிட்டது.

பாடசாலை மாணவர்கள் இவ்வாறு ஒரு துணிகரமான செயலைச் செய்திருப்பதால் பின்னணியில் யார் உள்ளனர் அல்லது எது உள்ளது என்பது நாம் சிந்திக்க வேண்டிய விடயம்.

பாடசாலையின் அதிபர், ஏனைய ஆசிரியர்களுக்கு இவ்விடயம் எவ்வாறு தெரியாமல் போனது?

மிகப்பாரதூரமான பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இவ்விடயத்தில் ஆசியர்களும் பெற்றோரும் பொறுப்புக் கூறவேண்டியவர்களே.

கல்வி என்பதைக் காரணம் காட்டி பெண் பிள்ளைகள் தமது ஒழுக்கத்தைப் பறிகொடுக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். இந்தப் பாடசாலை மாணவிகள் அனைவரும் கல்வி நிலையத்திலும் அதே ஆசிரியரிடம் கல்வி கற்பவர்கள். அது தவிர கணித பாட ஆசிரியரான இவரிடம் மாணவர்கள் மேலதிக வகுப்பிற்கும் சென்றுள்ளனர்.

இந்த ஆசிரியர் தாயின்றி , தந்தையால் வளர்க்கப்பட்டவர் எனவும் சிலாபத்தை வசிப்பிடமாக கொண்ட இவருக்கு தான் வசிக்கும் வீட்டைவிட மேலதிக வகுப்பிற்காக தனியாக வீடொன்றும் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலையில் மட்டுமன்றி, தனியார் கல்வி நிலையம், மேலதிக வகுப்புச் சூழல் இவை எல்லாம் சேர்த்தே இந்த காம வேலைக்கு உதவியுள்ளது.

மாலை 6 மணிக்குப்பின்னரும் அந்த தனியார் கல்வி நிலையத்தில் மின்குமிழ் பொருத்தி பாடம் எடுக்கப்படுவதாகவும் அதை சிரத்தையான ஆசிரியரின் பணி என மக்கள் நினனத்ததாகவும் கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மாணவிகள் விடலைப்பருவ சாதாரண தர மற்றும் தரம் 10 மாணவிகள் எனவும் கூறப்படுகின்றது.

வயதறிந்து உளவியல் ரீதியாக மாணவிகளுடன் உறவாடி
செல்லங்கள், என்ரை ராசாத்தியள், வாங்களனடி என்று தேன்தடவிப் பேசியே தனது காம வலையில் வீழ்த்தி உள்ளார்

தற்போது அகப்பட்டுள்ள மாணவிகள் மட்டுமன்றி , இன்னும் பல மாணவிகள் இவருடைய வலையில் சிக்கியுள்ளார்கள் எனவும் அவை வெளிவராமல் உள்ளது எனவும் அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் சில நாட்களின் முன்னரே மறைமுகமாக ஒரு ஊடகவியலாளர், சமூக வலைத்தளத்தில் கருத்துப் பகிர்ந்திருந்தார் எனவும் தகவல் தெரிந்தவர்களால் கூறப்படுகின்றது. இருப்பினும்
சமூகம் விழிக்க வில்லை.

தொலைபேசிப் பாவனை ஒழுக்க விழுமியங்களைப் பாதிப்பது தெரிந்தும் ஆசிரியர்கள் பாடங்களின் போதனைக்கு அதனைப் பயன்படுத்துவதும் இவ்வாறான சீர்கேடுகளுக்கு காரணமாகும் என்பதை பல ஆசிரியர் கவனத்தில் எடுப்பதில்லை, .அவ்வளவுக்கு தொலைபேசி மோகம் எம்மைப் பற்றிப் பிடித்துள்ளது .

கற்பிக்க வந்த ஆசிரியர், மாணவர்களின் சேட்டைகளை அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு நட்பாகிறார். அந்த நட்பு வலுப்பட்டு மாணவிகளின் நிர்வாணப் படங்களை எடுத்து தருமாறு மாணவர்களிடம் கேட்கும் அளவைக் கொடுக்கிறது.

ஆசிரியர் ஆசிரியராகத்தான் இருக்கவேண்டும். மாணவர்கள் மாணவராகத்தான் இருக்கவேண்டும். நண்பராக ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்ற புதிய பாடத்தை
இந்தச் சம்பவம் கற்றுத் தந்துள்ளது .

இங்கு, ஒரு ஆசிரியரின் தவறான வழிநடத்தல் எத்தனை மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழித்திருக்கிறது. இத்தனைக்கும் இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டத்தை நிறைவுசெய்த கணிதப்பட்டதாரி. பெற்றதாய் உயிருடன் இருந்திருந்தால் இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டோமே என மனம் வேகிப்போயிருப்பார்.

பெண் பிள்ளைகள் உணர்வுகளுக்கு அடிமையாகி, தங்கள் எதிகாலத்தை தாங்களே அழித்துக் கொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளமை பெற்றவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது

இவ்வளவு தூரம் பிள்ளைகள் போகும் அளவிற்கு பெற்றோரின் கவனம் எங்கே உள்ளது?

பாசம் என்ற பெயரில் ஆண் பிள்ளைகள் கேட்கும் எல்லாவற்றையும் செய்ய நினைப்பது மடத்தனம் என்பது புரிவதில்லையா ?

அறிவு , ஆளுமையையும் தெளிவையும் தருவது.

ஆனால் ஒரு ஆசிரியரின் தவறான வழிநடத்தலில் இவ்வாறு ஒரு அருவருப்பான சமூகச் சீர்கேடு நடந்துள்ளமையை எவ்வாறு எடுத்துக் கொள்வது?

காலப்போக்கில் இவ்விடயம் , பெண்களை வீட்டோடு முடக்குவதற்கே வழிசெய்யும் என்பதை எமது சமூகம் உணராமல் உள்ளதா?

இவ்வாறான சம்பவங்கள் முதலும் முடிவுமாக அமைய வேண்டுமானால் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் ஆசிரியர் மாணவர் பேதமின்றி
கடுமையான தண்டனையை வழங்கி ஏனையவர்களின் காம வன்மத்தை முற்றாக அழிக்க வேண்டும். .இதனை முல்லை மண்ணின் நீதி தேவதை சரியாகச் செய்யும் என நம்பினாலும்
பெற்றோர்கள், கல்வி என்ற பெயரில் உங்கள் பிள்ளைகள் உங்களை ஏமாற்ற இடம் கொடுக்காதீர்கள் . உங்கள் மேற்பார்வையின்றி இந்த வயது பிள்ளைகள் எதையும் செய்ய
அனுமதிக்காதீரகள்.
ஆசிரியர்களும். சக ஆசியரகளிடம் இவ்வாறான வக்கிரக புத்தி இருந்தால்
தண்டிக்கத் தவறாதீர்கள் .
தவறின் உங்கள் சகோதரிகள் , பிள்ளைகள் ஒரு இருண்ட யுகத்தை நோக்கியே செல்வார்கள் என்பது வெளிப்படை .

Related Articles

Leave a Reply

Back to top button