இலங்கைசெய்திகள்

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் ஸ்தாபகர் நினைவு தினமும் முதியோர் கௌரவிப்பும் பரிசில் வழங்கல் நிகழ்வும்!!

Madduvil

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் 26வது ஸ்தாபகர் தினம் எதிர்வரும் 05.12.2022 (திங்கட்கிழமை) அன்று இடம்பெறவுள்ளது.

சனசமூக நிலையத் தலைவர் க.திவாகர் தலைமையில் பி.ப 3.30 மணியளவில், சனசமூக கலையரங்கில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில்,

பிரதம விருந்தினராகச் சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் க.வாமதேவன் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக இலங்கை ரூபாஹினி கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் சி.வன்னியகுலம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பு.அருள்நேசன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கெளரவ விருந்தினர்களாக கைதடி மக்கள் நலன் பேணும் நட்புறவுக் கழகத்தலைவர் சி.நிஷாகரன், பருத்தித்துறை சிங்கர் காட்சியறை முகாமையாளர் க.சிவகரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button