இந்தியாசெய்திகள்

காதலுக்கு எல்லைகள் இல்லை – வங்கதேசப் பெண்ணின் அதிரடி முடிவு!!

Krishna Mandal

காதலுக்கு கண்கள் இல்லை என்று கூறுவதுண்டு. காதலுக்கு எல்லைகளும் இல்லை என்பதை வங்காள தேசத்தை சேர்ந்த இந்த இளம்பெண் நிரூபித்துள்ளார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கிருஷ்ணா மந்தல். இவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த அபிக் மந்தலுக்கும் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

ஆனால், கிருஷ்ணா மந்தலிடம் இந்தியா வருவதற்காக கடவுச்சீட்டு இல்லை. இதனால் அனைவரையும் வியக்கவைக்கும் முடிவை எடுத்துள்ளார் கிருஷ்ணா.

காதலனை மணப்பதற்காக சட்டவிரோதமாக எல்லை தாண்ட முடிவு செய்த அவர், சுந்தரவனக்காட்டை முதலில் வந்தடைந்துள்ளார்.

அங்கிருந்த நதியில் ஒரு மணிநேரம் நீந்தி, தொடர்ந்து தனது இலக்கை அடைந்தார். இந்தியா வந்த அவர் மூன்று நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் வைத்து தனது காதலனை நினைத்தப்படியே திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து வந்தற்காக கிருஷ்ணா மந்தலியை கைது செய்த பொலிஸார்,

அவரை வங்கதேசத்தின் உயர் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரத்தில், இளைஞர் ஒருவர் தனக்கு விருப்பமான சொக்லேட் வாங்குவதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button