இலங்கைசெய்திகள்

யாழில் பெற்றோல் நிலையத்தில் கைகலப்பு!!

jaffna

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியர் ஒருவருக்கு அதிக தொகைக்கு எரிபொருள் வழங்கப்பட்டு, ஏனையோருக்கு எரிபொருள் முடிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் மக்கள் கொதித்தெழுந்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், பெற்றோல் தாங்கிகளை திறந்து காட்டினால்தான் போவோம் என விடாப்பிடியாக நின்ற நிலையில் , எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் தாங்கிகளைத் திறந்து காட்டியுள்ளனர்.

பெற்றோல் ஓரளவிலேயே காணப்பட்டதெனினும் ஒரு தாங்கி நிறைய மண்ணெண்ணெய் இருந்துள்ளமை மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு வந்த பொலிஸாரிடம் மக்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து மக்களுக்கு மண்ணெண்ணெயை வழங்குமாறு பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button