இலங்கைசெய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி!!

Jaffna

 மூன்று நாட்கள் பயணமாக யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்றையதினம் (1)யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது மைத்திரிபால சிறிசேனவை வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி வரவேற்றுள்ளார்.

வைத்தியசாலை கட்டடங்களைப் பார்வையிட்ட அவர்,  நோயாளர்கள், வைத்திய சாலை பணியாளர்களுடனும் அளவளாவியுள்ளார். 

இன்று சனிக்கிழமை காலையில் பிறந்த ஆண்குழந்தையொன்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆசீர்வதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button