இலங்கைசெய்திகள்

வெற்றுக்காணி ஒன்றிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு!!

Jaffna

 யாழ்ப்பாணத்தில் செயற்படும் கும்பல் பயன்படுத்திய சில கூரிய ஆயுதங்கள் யாழ்ப்பாணம் செல்வநாயகபுரத்தில் உள்ள காணி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த காணியில்  சோதனை செய்த போது நான்கு கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

*தென்னிந்திய திரைப்படங்களில் இருந்து ஈர்க்கப்பட்ட குறித்த கும்பல் மோட்டார் சைக்கிள்களின் பாகங்களைப் பயன்படுத்தி இந்தக் கூரிய ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.*

 யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது கூரிய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த குழுவினர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா உள்ளிட்ட கும்பல்களால் இவ்வாறான ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இவ்வாறான ஒரு குழுவினர் நாசவேலைகளை மேற்கொள்வதற்காக இந்தக் கூரிய ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதங்களை உருவாக்கி பயன்படுத்திய குழுக்களை கண்டுபிடிக்க விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், சால்வேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button