இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கூட்டத்தின் இடை நடுவில் வெளியேறிய சி வி. மற்றும் மணிவண்ணன்!!

jaffna

சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக , சி வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில், தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில முடிவுகள் இணக்கம் காணப்படவில்லை என கூறியுள்ளார் .

அதேவேளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பித்தளை விளக்குச் சின்னத்தில் போட்டியிட தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனாலும் உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button