இலங்கைசெய்திகள்

யாழில் துயரம் – அதிவேகம் உயிரைப்பறித்தது

அராலி – வல்லை வீதியில் அதிவேகத்தால் இடம்பெற்ற வீதி விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 20 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த தூணுடன் மோதியதிலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் அராலி – வல்லை வீதியில் தெல்லிப்பழை அம்பனை சந்திக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளது. மாவிட்டபுரத்தைச் சேர்ந்த குணசேகரன் நிக்சன் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார். ரவிகரன் கனிஸ்டன் (வயது 20 ) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button