இலங்கைசெய்திகள்

வீட்டுக்கே போய்விடுங்கள்! – ராஜபக்சக்களிடம் எதிரணி வேண்டுகோள்!!

Harsha de Silva

(நமது விசேட செய்தியாளர்)

“பதவி ஆசைகளைக் கைவிட்டு ராஜபக்சக்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி வீட்டுக்குச் செல்வதே சிறந்தது.”

  • இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமையைச் சமாளிக்க வேண்டுமெனில் உறுதியான அரசு ஆட்சியில் இருக்க வேண்டும்.

ஊழல், மோசடி மிக்க – ஸ்திரமற்ற அரசை வைத்துக்கொண்டு நெருக்கடி நிலைமைக்குத் தீர்வுகாண முடியாது. அதேவேளை, சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்தால் பொருளாதார நெருக்கடி நிலைமை மென்மேலும் அதிகரிக்கும். எனவே, பதவி ஆசைகளைக் கைவிட்டு ராஜபக்சக்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி வீட்டுக்குச் செல்வதே சிறந்தது” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button